×

கொடுக்கல் வாங்கல் தகராறில் வீடு புகுந்து தம்பதி மீது தாக்குதல்: 7 பேருக்கு வலை

 

கூடலூர், பிப். 10: கொடுக்கல், வாங்கல் தகராறில் தம்பதியை வீடு புகுந்து தாக்கிய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். கூடலூர் சுக்காங்கல்பட்டி 4வது வார்டைச் சேர்ந்தவர் மூக்கன். இவரது மனைவி ஜெயா. இவர், இப்பகுதியை சேர்ந்த சினோ என்பவருக்கு கடந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் கைமாத்தாக கொடுத்துள்ளார். இதில் அவர் ரூ.4 ஆயிரம் மட்டும் கொடுத்துவிட்டு பாக்கிப் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஜெயா, சினோவிடம் பாக்கிப் பணத்தைக் கேட்டபோது சினோவின் தாய் சந்திரா ஜெயாவை சத்தம் போட்டு தகராறு செய்துள்ளார். அங்கிருந்தவர்கள் தகராறை விலக்கி விட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் மூக்கன், அவரது மனைவி ஜெயா, மகள் சூர்யா மற்றும் குழந்தைகள் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த சந்திரா, சினோ, ஸ்ரீநாத், அமுதவன், கிளின்டன், ஆர்த்தி, அரவிந்த் ஆகியோர் மூக்கனை சரமாரி தாக்கினர். இதை தடுக்க சென்ற ஜெயா, மகள் சூர்யாவையும் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த மூக்கன் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சந்திரா, சினோ உட்பட 7 பேரை தேடி வருகின்றனர்.

The post கொடுக்கல் வாங்கல் தகராறில் வீடு புகுந்து தம்பதி மீது தாக்குதல்: 7 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Mookan ,4th Ward ,Sukkankalpatti, Kudalur ,Jaya ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை