×

சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் போக்சோவில் கூலி தொழிலாளி கைது

 

ஜெயங்கொண்டம்,பிப்.10: ஜெயங்கொண்டம் அருகே 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார். அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி பகுதியை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் விஜய் (22). கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியில் 16 வயது சிறுமி ஒருவரை விஜய் மற்றும் அவரது பெற்றோர், சகோதரியுடன் சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. பெண் கொடுக்க சிறுமி வீட்டார் மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் சிறுமியை தனது பெற்றோர்கள் உதவியுடன் கட்டாயப்படுத்தி தாலி கட்டி 3 மாதம் வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகறிது. பின்னர் சிறுமியின் கழுத்தில் கட்டிய தாலியை அவிழ்த்து கொண்டு சிறுமியை தாய் வீட்டிற்கு அடித்து அனுப்பியதாக தெரிகிறது. இது குறித்து சிறுமி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்படி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தி விஜய் மற்றும் அவரது தந்தை சக்கரவர்த்தி, தாய் ஜெயந்தி, சகோதரி செண்பகவல்லி உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக விஜயை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் போக்சோவில் கூலி தொழிலாளி கைது appeared first on Dinakaran.

Tags : Boxo ,Jayangondam ,VIJAY ,SATAMPADI ,ARIYALUR DISTRICT ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...