×

முதியவர் தற்கொலை

நெல்லை, பிப். 10: மானூர் அருகேயுள்ள அலவந்தான்குளம், வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குழந்தை இயேசு (63), இதய நோயால் அவதிப்பட்டு வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் மகள் ஜூலியட் வீட்டில் தங்கியிருந்தார். இதயநோய், மனைவி இல்லாதது ஆகிய காரணங்களால் மனமுடைந்து காணப்பட்ட குழந்தை இயேசு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து மானூர் இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி வருகிறார்.

The post முதியவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Jesus ,North Street, Alavanthankulam ,Manur ,Juliet ,
× RELATED மானூர் அருகே கல்லூரி மாணவி மாயம்