×

வேடசந்தூர் அருகே அரசு பஸ்- கண்டெய்னர் லாரி மோதல் 3 பேர் படுகாயம்

வேடசந்தூர், பிப். 10: வேடசந்தூரில் இருந்து பள்ளபட்டி நோக்கி 13 பயணிகளுடன் நேற்று அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் டிரைவராக பாலமுருகன், கண்டக்டராக பிரபாகரன் இருந்தனர். கரூர்- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகேயுள்ள ரெங்கநாதபுரத்தில் பயணிகளை இறக்குவதற்காக இப்பஸ் நின்றது. அப்போது பின்னால் பெங்களூர் நோக்கி சென்ற சுனையா என்பவர் ஓட்டி வந்த கண்டெய்னர் லாரி பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ் சாலையோரம் உள்ள 10 அடி பள்ளத்தில் பாய்ந்து அங்கிருந்த பால் விற்பனை செய்யும் கடையை உடைத்து கொண்டு நின்றது. கண்டெய்னர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் பாலமுருகன், கண்டெய்னர் லாரி ஓட்டுனர் கனையா, பஸ்சில் பயணம் செய்த சபுரா பீவி ஆகியோர் காயமடைந்தனர். மற்றவர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பின் 3 பேரும் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கூம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேடசந்தூர் அருகே அரசு பஸ்- கண்டெய்னர் லாரி மோதல் 3 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Pallapatti ,Balamurugan ,Prabhakaran ,Renkanathapuram ,Karur- Dindigul ,Dinakaran ,
× RELATED கிணற்றில் விழுந்த மயில் மீட்பு