×

திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிப்.12ல் வேளாண் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல், பிப். 10: திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிப்.12ம் தேதி வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் தலைமையில் பிப்.12ம் தேதி (திங்கட்கிழமை) முற்பகல் 11 மணி முதல் 12 மணி வரை வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் வேளாண் சார்ந்த சங்கங்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகள் மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை அளித்து தீர்வு காணலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பிப்.12ல் வேளாண் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Dindigul Kotaksar Office ,Dindigul ,Collector ,Poongodi ,District Collector ,Dindigul Revenue Commissioner ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய...