×

சேலம் கோர்ட்டில் 19ல் அண்ணாமலை ஆஜராக உத்தரவு

சேலம்: ‘இரு மதத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான பியூஷ், சேலம் ஜேஎம் 4 நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதையடுத்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கிற்கு தடை விதிக்ககோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனால் அண்ணாமலைக்கு மீண்டும் சம்மன் அனுப்பி விசாரிக்க வேண்டும் என்று சேலம் நீதிமன்றத்தில் பியூஷ் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதித்துறை நடுவர், ‘இந்த வழக்கு தொடர்பாக வரும் 19ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அண்ணாமலைக்கு தெரியும்,’ என்று உத்தரவில் கூறியிருந்தார்.

The post சேலம் கோர்ட்டில் 19ல் அண்ணாமலை ஆஜராக உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Salem ,Piyush ,JM 4 court ,Salem Court ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்...