புதுச்சேரி: புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தற்காலிக தடை என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார். அடர் நிறமேற்றப்பட்ட பஞ்சு மிட்டாயில் நச்சுப் பொருள் கலந்திருப்பது உறுதியாகியுள்ளது. பஞ்சு மிட்டாய் வியாபாரிகள் உணவுப் பாதுகாப்பு தரச்சான்று பெற்று விற்பனை செய்ய வேண்டும். எவ்வளவு விரைவாக தரச்சான்று பெறுகிறார்களோ அவ்வளவு விரைவாக வியாபாரத்தை தொடங்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
The post புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனை செய்ய தற்காலிக தடை: துணைநிலை ஆளுநர் தமிழிசை appeared first on Dinakaran.