கோவை: யானை மீது ரயில் மோதுவதை தடுக்க செயற்கை நுண்ணறிவு வசதியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கோவை எட்டிமடை- வாளையாறு இடையேயான ரயில்வே
தண்டவாளத்தில் ரயில் மோதி யானை உயிரிழக்கும் நிகழ்வை தடுக்க இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானைகள் தண்டவாளம் அருகே வந்தால் உடனே கட்டுப்பாட்டு அறை, ரயில் லோகோ பைலட்டுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் தரும். ரயில்வே தண்டவாளம் அருகே வரும் யானைகளை விரட்டும் அதிநவீன டிரோன் கேமராவும் செயல்பாட்டுக்கு வந்தது.
The post யானை மீது ரயில் மோதலை தடுக்க கண்காணிப்பு கேமரா!! appeared first on Dinakaran.