×

சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். பெரம்பூர் பின்னி மில் நிலம் தொடர்பாக எழுந்த ரூ.50 கோடி ஊழல் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர். பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்திய நிலையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.

அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் கட்டுமான நிறுவன உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை தியாகராயர் நகர், மேற்கு மாம்பலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராயர் நகரில் லேண்ட் மார்க் ஹவுசிங் நிறுவன நிர்வாக இயக்குனர் உதயகுமார் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் எப்.ஐ.ஆர். அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து சோதனை நடத்தி வருகின்றனர். நுங்கம்பாக்கம் கோத்தாரி தெருவில் உள்ள கட்டுமான நிறுவன அதிபர் சுனில் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

The post சென்னையில் பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pini Mill ,Perampur ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...