- சிவகங்கை
- எஸ்ஐ சிவபிரகாசம்
- சிவகங்கை குடிமக்கள் வழங்கல் குற்றச்சாட்டு துறை
- சக்குடி
- Tiruppuvanam
- தின மலர்
சிவகங்கை, பிப்.9: திருப்புவனம் அருகே சக்குடி விலக்கில் சிவகங்கை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை எஸ்ஐ சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் நேற்று வாகனை சோதனை நடத்தினர். அவ்வழியே வந்த லோடு வாகனத்தை சோதனை செய்த போது அதில் 32 மூட்டைகளில் 850கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுரை மேலஅனுப்பானடியை சேர்ந்த முனீஸ்வரன்(25), விருதுநகர் மாவட்டம் கீழ்குடியை சேர்ந்த ஆனந்தகுமார்(23) ஆகியோரை கைது செய்தனர்.
இதுபோல் காளையார்கோவில் அருகே காளக்கண்மாய் விலக்கில் வாகன சோதனை நடத்திய போது அவ்வழியே வந்த லோடு வாகனத்தை சோதனை செய்ததில் 45 மூட்டைகளில் 1800கிலோ ரேசன் அரிசி, 5 மூட்டைகளில் 200கிலோ ரேசன் துவரம் பருப்பு கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுரை தெற்குவெளி வீதியை சேர்ந்த சரவணன்(52), காரைக்குடி அருகே மருங்கிப்பட்டியை சேர்ந்த தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
The post ரேசன் அரிசி கடத்திய நான்கு பேர் கைது appeared first on Dinakaran.