×

சீனிவாசபுரம் பகுதியில் கனரக வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும்

 

கரூர், பிப். 9: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் பகுதியில் கனரக வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட லைட்ஹவுஸ் அருகே சீனிவாசபுரம் பகுதி உள்ளது. இந்த சாலையின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும், குடியிருப்புகளும் உள்ளன. கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார், மார்க்கெட், காமராஜ் சாலை, மாரியம்மன் கோயில், பழைய அரசு மருத்துவமனை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் சீனிவாசபுரம் பகுதியின் வழியாக செல்கிறது.

மிகக் குறுகிய தெருக்களில் ஒன்றாக சீனிவாசபுரம் பகுதியும் ஒன்று. இந்நிலையில், இநத பகுதிச் சாலையில் அதிகளவு கனரக வாகன போக்குவரத்து காரணமாக மற்ற வாகனங்கள் எளிதாக செல்ல முடியாத காரணமாக அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. எனவே, சம்பந்தப்படட அதிகாரிகள், சீனிவாசபுரம் பகுதியில் கனரக வாகன போக்குவரத்தை கண்காணித்து தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post சீனிவாசபுரம் பகுதியில் கனரக வாகன போக்குவரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Srinivasapuram ,Karur ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED காவிரியில் போதிய இருப்பு இல்லாததால்...