- நாகம்பாடி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பபிசேகம்
- செந்துரா
- அரியலூர்
- சுப்பிரமணியா சுவாமி
- கோவில்
- கலனித் தெரு, ந்கம்பாடி
- சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பபிசேகம்
- செந்தூரம், அரியலூர் மாவட்டம்
- Kumbabhishekam
- தின மலர்
அரியலூர்,பிப்.9: செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி, காலனித் தெரு சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி, காலனித் தெருவிலுள்ள சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இக்கோயில் அப்பகுதி பொதுமக்களால் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு முன் புனித நீர் கொண்டு வரப்பட்டு, நான்கு கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.9.30 மணிக்கு மேல் அர்ச்சகர்கள் தமிழ் முறைப்படி கோயில் கலசத்துக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். பின்னர் கோபுர கலசத்துக்கு தீபாதாரனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பொதுக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
The post செந்துறை அருகே நக்கம்பாடி சுப்பிரமணியசுவாமி கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.