×

ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு

 

ஜெயங்கொண்டம், பிப்.9: ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் தாலிச் செயினை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். தா.பழூர் அருகேயுள்ள கோட்டியால் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம்.இவரது மனைவி அன்னலெட்சுமி. நேற்று மதியம்3:30 மணியளவில் கடாரங்கொண்டானில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.

பெரியவளையம் பைபாஸ் அய்யனார் கோயில் அருகே சென்றபோது பின்னால் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் அன்னலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை அறுக்க முயன்றான். ஆனால் சுதாரித்த அன்னலெட்சுமி செயினை இறுகப் பிடித்துக் கொண்டார். இதில் அறுந்த ஐந்தரை பவுன் செயினுடன் அந்த நபர் தப்பினான். இது குறித்த புகாரின்பேரில் ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் நடராஜன் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.

The post ஜெயங்கொண்டம் அருகே பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangkondam ,Selvam ,Kotyal ,Bhaur ,Annaletshumi ,Katarangondan ,
× RELATED ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில்...