×

அரிமளத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம்

 

திருமயம்,பிப்.9: அரிமளத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்தில் 32 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில் ஊராட்சிகளில் பணிபுரியும் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அரிமளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி செயலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளின் கணக்குகள் பராமரிப்பு, பயன்பாடு இல்லாத கணக்குகள் உடனடியாக நீக்கம் செய்தல் தொடர்பாக ஊராட்சி செயலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

கூட்டமானது ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், ஊராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ராஜா, அனைத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கலந்து கொண்டு ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், கணக்குகள் குறித்து விவாதம் நடத்தினர். இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர் மணிகண்டன் நன்றி கூறினார்.

The post அரிமளத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Arimalam ,Thirumayam ,Arimalam Union ,Pudukottai District ,Union ,
× RELATED பிரானூர் ஊராட்சி பகுதியில் சீராக குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை