×

மது போதையில் பீர் பாட்டிலில் மெக்கானிக்கை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது

 

மேட்டுப்பாளையம், பிப்.9: கர்நாடக மாநிலம் நஞ்சன்கோடு பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் (30). இவர், தற்போது மேட்டுப்பாளையம் அரசு போக்குவரத்து பணிமனை அருகே உள்ள ஒரு ஷோரூமில் மெக்கானிக்காக தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 6ம் தேதி அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நண்பர் ஸ்ரீநாத் என்பவருடன் மது அருந்த சென்றுள்ளார். அப்போது, அவருக்கும் மற்றொரு வாலிபருக்கும் போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றி ஒரு கட்டத்தில் அந்த நபர் கிரிஷை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில், நெல்லை மாவட்டம் வல்லம் பகுதியை சேர்ந்த பீர் முகமது என்பவரது மகன் ஷேக் முகமது (20) என்பவர் மெக்கானிக் கிரிஷை பீர் பாட்டிலால் தாக்கியதும், அவர் தற்போது மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் உணவகத்தில் தங்கி புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை நேற்று கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post மது போதையில் பீர் பாட்டிலில் மெக்கானிக்கை தாக்கிய புரோட்டா மாஸ்டர் கைது appeared first on Dinakaran.

Tags : Prota ,Mettupalayam ,Girish ,Nanjankodu ,Karnataka ,Mettupalayam Government Transport Workshop ,
× RELATED நாவலூரில் அடுக்குமாடி குடியிருப்பு...