×

திருச்செந்தூரில் எஸ்எஸ்ஐ மனைவியிடம் 5 பவுன் நகை வழிப்பறி

திருச்செந்தூர் பிப். 9: திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம், சண்முகபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் தாமஸ். இவர், கோயில் காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாத்திமாமேரி (43). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். பாத்திமா மேரி தினமும் தனது மொபட்டில் குழந்தைகளை அசோக் நகர் மண் ரோடு வழியாக குமாரபுரத்தில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் மாலையிலும் பாத்திமாமேரி வழக்கம்போல் குழந்தைகளை அழைத்து வர பள்ளிக்கு புறப்பட்டார். ஆனால் எஸ்எஸ்ஐ தாமஸ் குழந்தைகளை ஏற்கனவே வீட்டிற்கு அழைத்து வந்து விட்டதாக தகவல் கிடைத்ததால், மொபட்டில் வீடு திரும்பினார். அசோக் நகர் மண் ரோட்டில் வரும்போது எதிரே பைக்கில் வந்த மர்மநபர்கள் வழிமறித்து பாத்திமாமேரி அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பினர். இதுகுறித்து அவர், திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார் எஸ்ஐ ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருச்செந்தூரில் எஸ்எஸ்ஐ மனைவியிடம் 5 பவுன் நகை வழிப்பறி appeared first on Dinakaran.

Tags : Thiruchendur ,SSI ,Tiruchendur ,Thomas ,Sanmugapuram North Road, Veerapandianpatnam ,Temple Police Station ,Fatima Mary ,
× RELATED திருச்செந்தூர் முருகனுக்கு மாலை அணிந்து விரதம் துவங்கிய மக்கள்