- சேலம்
- ஆணையாளர்
- கிருஷ்ணவேணி
- வருவாய் திணைக்களம்
- சுகாதார துறை
- மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு
- சேலம் மல்லூர்
- டி.மேட்டூர்
- தொழிலாளர் துறை
- தின மலர்
சேலம், பிப்.9: சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தலைமையில், வருவாய்துறை, போலீசார், சுகாதாரதுறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியோருடன் தொழிலாளர் துணை, உதவி ஆய்வர்கள் அடங்கிய குழுவினர் கொத்தடிமை தொழிலாளர் சட்டத்தின் கீழ் சேலம் மல்லூர், டி. மேட்டூர், வெற்றி நகர், நெத்திமேடு, கருங்கல்பட்டி, கொண்டலாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ளசெங்கல் சூளை, அரிசி ஆலை, இரும்பு உருக்காலை மற்றும் தறிப்பட்டறைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது. கூட்டாய்வின் போது, கொத்தடிமை தொழிலாளர்களாக எவரும் பணியமர்த்தப்படவில்லை என்று கண்டறியப்பட்டது. ஆய்வின் போது, தொழிலாளர்களை கொத்தடிமைகளாக பணிக்கு அமர்த்துவது குற்றம். அவ்வாறு தொழிலாளர்களாக பணியமர்த்தும் உரிமையாளர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் நீதிமன்றத்தால் விதிக்கப்படும் என தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி எச்சரித்துள்ளார்.
The post தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.