×

வீட்டின் பூட்டை உடைத்து ₹2 லட்சம் பொருட்கள் கொள்ளை

கிருஷ்ணகிரி, பிப்.9: வேப்பனஹள்ளி அருகே பெரிய பொம்மரசனப்பள்ளியைச் சேர்ந்தவர் சங்கரப்பா. இவரது மனைவி திம்மக்கா(60). இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலையாக கர்நாடகா மாநிலம் கோலார் ஒசஅள்ளி பகுதிக்கு சென்றனர். நேற்று முன்தினம், வீடு திரும்பியபோது பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ₹1 லட்சம் மதிப்பிலான 7 சிசிடிவி கேமராக்கள், ₹40 ஆயிரம் மதிப்பிலான வாஷிங் மிஷின், ₹58 ஆயிரம் மதிப்பிலான யூபிஎஸ் என மொத்தம் ₹2 லட்சம் மதிப்பிலான பொருட்களை காணவில்லை. இதுகுறித்து வேப்பனஹள்ளி போலீசில் திம்மக்கா புகாரளித்தார். அதில், கொண்டேப்பள்ளியைச் சேர்ந்த சதீஷ்(28) உள்பட 5 பேர் வீட்டிற்கு வந்ததாகவும், அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வீட்டின் பூட்டை உடைத்து ₹2 லட்சம் பொருட்கள் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Shankarappa ,Periya Pommarasanapally ,Veppanahalli ,Thimmakka ,Kolar Osalli ,Karnataka ,
× RELATED வறட்சியால் பாதிக்கப்பட்ட மாமரங்கள் கணக்கெடுப்பு