×

தற்ெகாலை செய்தவரின் கண்கள் தானம்

மதுரை, பிப். 9: மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (30). இவரது மனைவி கங்கா (22). இதற்கிடையே மது பழக்கத்திற்கு அடிமையான ரஞ்சித்குமார், வேலைக்கு செல்லாாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் கங்கா தனது தாய் வீட்டிற்கு சென்றபோது, ரஞ்சித்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திடீர்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இதற்கிடையே இறந்த ரஞ்சித்குமாரின் கண்களை, கங்கா தானமாக வழங்கியுள்ளார். இதனை பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டினர்.

The post தற்ெகாலை செய்தவரின் கண்கள் தானம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ranjith Kumar ,Melavasal ,Ganga ,
× RELATED கள்ளழகர் திருவிழா: மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட் கிளை