×

தொழில்நுட்பதுறையாக அறிவிக்க வேண்டும்: நில அளவைத்துறை சங்கம் கோரிக்கை

சென்னை: சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திரகுமார் அளித்த பேட்டி: எங்கள் நீண்டநாள் கோரிக்கையை வலியுறுத்தி நாளை (10ம் தேதி) சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இதில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சிறப்புரை ஆற்றுகிறார். எங்கள் துறையை தொழில்நுட்ப துறையாக அறிவித்து, தற்போது உள்ள பணியாளர்களை கல்வித்தகுதியின் அடிப்படையில் வேலை மற்றும் ஊதியம் உயர்த்தி வழங்கிட வேண்டும். குறுவட்ட அலுவலர்களின் தரம் உயர்த்தப்பட வேண்டும், சார் ஆய்வாளர்கள் பனியிடங்கள் நிரப்பப்பட வேண்டும், ஓய்வூதியத்தை முறைப்படுத்த வேண்டும், உள்ளிட்ட 28 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாநாடு நடைபெறுகிறது.

The post தொழில்நுட்பதுறையாக அறிவிக்க வேண்டும்: நில அளவைத்துறை சங்கம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Land Surveyors Association ,Chennai ,Tamil Nadu Land Surveyors Association ,State President ,Mahendra Kumar ,Chennai Chepakkam Press ,Chennai Engambak ,Tamil Nadu Revenue Department ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...