×

தமிழக-கேரளா எல்லையோர பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு

மஞ்சூர், பிப்.8: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கிண்ணக்கொரை. தமிழக கேரளா எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியை சுற்றிலும் இரு மாநிலத்திற்கும் சொந்தமான அடர்ந்த காடுகள் உள்ளன. இந்த காடுகளில் விலை உயர்ந்த மரங்களுடன் வன விலங்குகளும் ஏராளமாக உள்ளது. இந்நிலையில், தமிழக, கேரளா பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக நீடித்து வரும் பனியின் தாக்கத்தால் வனப்பகுதிகளில் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியின் தாக்கத்தால் மரம், செடி, கொடிகள், புல்வெளிகள் காய்ந்து கருக துவங்கியுள்ளது. வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளும் வறண்டு வருவதால் குடிநீர் மற்றும் இரைகளை தேடி வனவிலங்குகள் இடம் பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வறட்சியால் வனப்பகுதிகளில் காட்டுத்தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் இப்பகுதிகளில் வறட்சியின் காரணமாக பெரிய அளவில் காட்டுத்தீ ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு காட்டுத்தீ பரவலை தவிர்க்க வனத்துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வேட்டை மற்றும் தீத்தடுப்பு காவலர்கள் மூலம் வனப்பகுதிகளை ஒட்டிய சாலையோரங்களில் தீவிர கண்கானிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தமிழக-கேரளா எல்லையோர பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுவதை தவிர்க்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு appeared first on Dinakaran.

Tags : forest department ,Tamil Nadu-Kerala ,Manjoor ,Kinnakorai ,Nilgiri district ,Tamil Nadu ,Kerala ,department ,Dinakaran ,
× RELATED தமிழக – கேரள எல்லையில் முகாமிட்ட யானை உயிரிழப்பு