×

மாவோயிஸ்டுடன் தொடர்பா?.. குறும்பட இயக்குனர் வீட்டில் என்ஐஏ சோதனை

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்.ஐ.ஏ அதிகாரிகள் பல இடங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீப காலமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை கொரட்டூர், ஆவடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை கொளத்தூரில் வசித்து வரும், குறும்பட இயக்குநர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மாவோயிஸ்டுடன் தொடர்பு இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலை வைத்து, ஹைதராபாத்தில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட முகில் சந்திரா, சென்னை கொளத்தூரில் வசித்து வருகிறார்.

The post மாவோயிஸ்டுடன் தொடர்பா?.. குறும்பட இயக்குனர் வீட்டில் என்ஐஏ சோதனை appeared first on Dinakaran.

Tags : Maoist ,NIA ,Chennai ,Tamil Nadu ,National Intelligence ,Koratur ,Aavadi ,
× RELATED வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை