×

பதவி உயர்வு கோரி மின் ஊழியர் ஒன்றியஅமைப்பு ஆர்ப்பாட்டம்

 

தஞ்சாவூர், பிப்.8: தமிழ்நாடு மின் ஊழியர் ஒன்றிய அமைப்பு சிஐடியூ தஞ்சாவூர் மாவட்டம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சாவூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திட்ட தலைவர் அதிதூதமைக்கேல்ராஜ் தலைமை தாங்கினார். திட்ட செயலாளர் காணிக்கைராஜ், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் ராஜாராமன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கேங்மேனுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். உள்முகத்தேர்வு தகுதி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சப்ளை இல்லாத மின்கம்பங்களில் மட்டுமே கேங்மேனுக்கு பணி வழங்க வேண்டும். விருப்ப இடமாறுதல் வழங்க வேண்டும் என்பன ள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்ட்டன.

The post பதவி உயர்வு கோரி மின் ஊழியர் ஒன்றியஅமைப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Electrical Workers' Union ,Thanjavur ,CITU ,Tamil Nadu Electrical Employees Union ,Thanjavur Power Distribution Circle Superintending Engineer's Office ,Adhiduthamai Khelraj ,Electrical Employees' Union ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...