- புதுக்கோட்டை
- தெபநாய்காட்
- புதுக்கோட்டை மாவட்டம்
- அரந்தாங்கி வருவாய் கோட்டம்
- அறந்தாங்கி வட்டம்
- பூவதக்குடி சரகம்
- தெப்பனைக்காடு
- தின மலர்
புதுக்கோட்டை, பிப்.8: மேற்பனைக்காட்டில் 14ம் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கு இன்று(8ம் தேதி முதல்) முன் மனு அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் ெதரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வருவாய்கோட்டம், அறந்தாங்கி வட்டம், பூவத்தக்குடி சரகம், மேற்பனைக்காடு வருவாய் கிராமத்தில் வரும் 14ம் தேதி (புதன்கிழமை) அன்று காலை 10 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 08.02.2024 முதல் பொதுமக்களிடமிருந்து முன் மனுக்கள் மேற்பனைக்காடு சமுதாயக் கூடத்தில் பெறவுள்ளதால் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்கள் அளித்து பயனடையலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
The post மக்கள் தொடர்பு முகாம் முன் மனு அளித்து பயன்பெற அழைப்பு appeared first on Dinakaran.