×

குழந்தைகள் மைய பணியாளர்களுக்கு பயிற்சி

திருச்சி, பிப்.8: லால்குடி வட்டாரம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் குழந்தைகள் மைய பணியாளர்களுக்கான குழந்தை உரிமை பாதுகாப்பு மற்றும் மாற்றுக் குடும்ப முறை பராமரிப்பு திட்டம் குறித்த பயிற்சி நடைபெற்றது. குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ராணி தலைமை வகித்தார். இப்பயிற்சியில் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு குழந்தைகள் என்போர் யார், குழந்தைகளுக்கான நான்கு வகையான உரிமைகள், குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்பு, சட்டம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம், இளஞ்சிறார் நீதி சட்டம் இந்து தத்தெடுத்தல் மற்றும் பராமரித்தல் சட்டம் மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகள் கற்பிப்போம் குறித்தும் மாற்றுக் குடும்ப பராமரிப்பு முறைகளான குழந்தை தத்தெடுத்தல் தற்காப்பு வளர்ப்பு திட்டம் பிற்காப்பு வளர்ப்பு திட்டம் மற்றும் கின்ஷிப் குழந்தைகளுக்கான இலவச கட்டணமில்லா தொலைபேசி எண் 1098 செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளித்தார். பயிற்சியில் மண்ணச்சநல்லூர், புள்ளம்பாடி, லால்குடி வட்டாரத்தை சேர்ந்த குழந்தைகள் மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post குழந்தைகள் மைய பணியாளர்களுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Trichy ,Rani Chief ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...