×

ஓசூர் பெண்ணிடம் ₹12.35 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி, பிப்.8: ஓசூர் துவாரகா நகர் புதிய ஏஎஸ்டிசி பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் பாபு. இவரது மனைவி லதா. இவரது செல்போனுக்கு கடந்த 13.1.2024 அன்று குறுந்தகவல் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும் பணத்தை முதலீடு செய்தால் அதிகளவு லாபம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அதில் கொடுத்திருந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு லதா பேசினார். அப்போது அவர்கள் கொடுத்த வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹12 லட்சத்து 35 ஆயிரத்து 865ஐ அவர் அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் கூறியபடி எந்த லாபமும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டபோது அந்த நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த லதா, இது பற்றி நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓசூர் பெண்ணிடம் ₹12.35 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Hosur ,Krishnagiri ,Kishore Babu ,Hosur Dwarka Nagar ,ASTC ,Lata ,
× RELATED வெயிலுக்கு தானாக எரிந்த பைக்குகள்