×

மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்த பயனாளிகளுக்கு வீட்டு வரி ரசீதுகள் வழங்கல்

 

காரியாபட்டி, பிப்.8: காரியாபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்த மக்களுக்கு ஆவணங்களை பேரூராட்சி தலைவர் வழங்கினார். காரியாபட்டி பேரூராட்சியில் கடந்த டிச.30ம் தேதி தமிழக முதல்வரின் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அரசின் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொது மக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வீட்டு வரி ரசீது பெயர் மாற்றம், குடிசை வீட்டுக்கு வரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக பரிசீலனை செய்யப்பட்டு அதற்குரிய ஆவணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் செந்தில் பயனாளிகளுக்கு உரிய ஆவணங்களை வழங்கினார். செயல் அலுவலர் அன்பழகன், கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி, தீபா, சரஸ்வதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மனு அளித்த பயனாளிகளுக்கு வீட்டு வரி ரசீதுகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Kariyapatti ,Municipal ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...