- பாஜக
- முதல் அமைச்சர்
- Puduvai
- ஆர் காங்கிரஸ் கட்சி
- 14வது ஆண்டு தொடக்க விழா
- கட்சித் தலைமை அலுவலகம்
- லாஸ்பேட்டை ஈசிஆர்
- ரங்கசாமி
என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் 14ம் ஆண்டு துவக்க விழா லாஸ்பேட்டை இசிஆரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் ரங்கசாமி பேசியதாவது: கூட்டணி கட்சியோடு ஆட்சி அமைத்து மாநில வளர்ச்சிக்காக 5 ஆண்டுகள் முழுமையாக ஆண்டு இருக்கிறோம். பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். கூட்டணி ஆட்சியில் ஒன்றாக இணைந்து அமைச்சரவையில் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் உதவியோடு நிதியை பெற்று நிர்வாகத்தை சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறோம். கூட்டணி கட்சி வேட்பாளரை வெற்றிபெற வைப்பது நமது கடமை. கட்சியின் தொண்டர்கள் ஆர்வத்துடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது, வருகின்ற தேர்தல் மிக முக்கியமான தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் (பாஜ) வெற்றிபெற உழைக்க வேண்டும் என அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
The post புதுவையில் பாஜ போட்டி முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.