×

தெருநாய் கடித்து மாணவர் காயம்

வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (10). 5ம் வகுப்பு மாணவர். இந்த சிறுவன் நேற்று கிராமத்தில் உள்ள பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று மாணவரை விரட்டி, விரட்டி கடித்துள்ளது. இதில், மாணவரின் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் படுகாயம் ஏற்பட்டது.

இதையடுத்து மாணவரின் பெற்றோர் சிறுவனை வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கிராமத்தில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. இதுவரை 10க்கும் மேற்பட்டவர்களை கடித்துள்ளன. எனவே, ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

The post தெருநாய் கடித்து மாணவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Jayasurya ,Nagampatti ,Vedasandur, Dindigul district ,
× RELATED கிணற்றில் விழுந்த மயில் மீட்பு