×

TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்.12-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்.12-ம் தேதி வரை அவகாசத்தை அண்ணா பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. 2024-25-ல் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எம்.இ., எம்.டெக், எம்.ஆர்க், எம்.பிளான் படிப்புகளில் சேர்வதற்கான சீட்டா நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வு மார்ச் 9-ம் தேதியும், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடைபெறுகிறது.

The post TANCET, CEETA தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிப்.12-ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம் appeared first on Dinakaran.

Tags : Anna University ,TANCET ,CEETA ,Chennai ,MCA ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...