×

நடத்தையில் சந்தேகம்; காதல் மனைவியை கத்தியால் =சரமாரியாக வெட்டிய கணவர்: வேடசந்தூரில் பரபரப்பு

வேடசந்தூர்: வேடசந்தூரில் நடத்தையில் சந்தேகப்பட்டு காதல் திருமணம் செய்த மனைவியை கணவர் சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள நாடார் தெருவை சேர்ந்தவர் அரபு அலி (30). இவர், நகரில் உள்ள கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிலட்சுமி (எ) ஜாஸ்மினை (25) காதலித்து திருமணம் செய்தார். 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்நிலையில் சமீபகாலமாக அரபு அலிக்கு, மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று மதியம் அரபு அலி வீட்டிற்கு வந்தபோது ஜாஸ்மின் செல்போனில் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கணவரை பார்த்ததும் செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து அரபு அலி விசாரித்துள்ளார். தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அரபு அலி, வீட்டில் இருந்த கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் மனைவியின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாஸ்மினை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரபு அலியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நடத்தையில் சந்தேகம்; காதல் மனைவியை கத்தியால் =சரமாரியாக வெட்டிய கணவர்: வேடசந்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Arab Ali ,Nadar Street ,Vedasandur, Dindigul district ,
× RELATED கிணற்றில் விழுந்த மயில் மீட்பு