×

பள்ளி மாணவிக்கு காதல் டார்ச்சர்; 52 வயது ஆசாமி அதிரடி கைது: அரும்பாக்கத்தில் பரபரப்பு

அண்ணாநகர்: பள்ளி மாணவிக்கு தொடர்ந்து காதல் டார்ச்சர் கொடுத்த 52 வயதுக்காரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவரும் மாணவியை அந்த பகுதியை சேர்ந்த 52 வயது மதிக்கதக்க ஒருவர் அடிக்கடி சந்தித்துள்ளார். அப்போது அந்த நபர், தன்னை காதலிக்கவேண்டும் என்று மாணவிக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளார். இதுசம்பந்தமாக மாணவியின் சார்பில், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து அந்த நபரை கைது செய்து விசாரித்தனர்.

இதில் மாணவியை காதலிக்க கட்டாயப்படுத்தியதுடன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து இவ்வழக்கு அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு, இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தினார். சூளைமேடு பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்தபோது அதே பகுதியில் வசித்துவந்த சுந்தரராஜன் (52)என்பவர் தினமும் மாணவிக்கு காதல் டார்ச்சர் கொடுத்துள்ளார். மேலும் மாணவி எங்கு சென்றாலும் பின்தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இவரது தொல்லை நாளுக்குநாள் அதிகரித்தால் அந்த வீட்டை காலி செய்துகொண்டு அரும்பாக்கம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்துள்ளனர். அந்த விலாசத்தை கண்டுபிடித்து அங்கு வந்தும் மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.இவ்வாறு தெரியவந்துள்ளது.

இதையடுத்து, சுந்தரராஜனிடம் விசாரித்தபோது, ‘’சூளைமேடு பகுதியில் வசித்து வருவதாகவும் இவருக்கு திருமணமாகி குடும்பத்தார் பெங்களூரூவில் வசித்து வருகின்றனர். 3 மகன்கள் உள்ளனர். மாணவியை கடந்த ஓராண்டாக காதலிக்க வற்புறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்’ என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பள்ளி மாணவிக்கு காதல் டார்ச்சர்; 52 வயது ஆசாமி அதிரடி கைது: அரும்பாக்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Arumbakkam ,Annanagar ,Chennai ,
× RELATED சிறைக்கைதி உயிரிழப்பு