×

நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

சென்னை: கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய அனைத்து தரப்பினருக்கும் நன்றி என மாவட்ட செயலாளர்களுடன் கூட்டணி தொடர்பாக ஆலோசித்த பின் பிரேமலதா பேட்டி அளித்துள்ளார். அரசு மரியாதையுடன் கேப்டனின் உடலை அடக்கம் செய்ய உத்தரவிட்ட அரசுக்கு நன்றி. தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு அரசு மரியாதை அளித்து நேரில் வந்து அஞ்சலி செலுத்திய முதலமைச்சருக்கு நன்றி எனவும் பேட்டி அளித்துள்ளார். தேமுதிக தனித்து களம் காண வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கருத்துகளை தெரிவித்தனர். யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்று முதல் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இதுவரை யாருடனும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ நாங்கள் பேசவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்கும் கட்சியுடனே தேமுதிக கூட்டணி என பிரேமலதா விஜயகாந்த் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Premalatha Vijayakanth ,Demudika ,Chennai ,Premalatha ,TEMUTIKA CHAIRMAN ,Premalatha Vijayakand ,Dinakaran ,
× RELATED காவலர்கள் மீது தாக்குதலுக்கு தேமுதிக கண்டனம்