×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை பிப்.8க்கு ஒத்திவைப்பு..!!

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனு பிப்ரவரி.8க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்களான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோா் கடந்த 2020ம் ஆண்டு, ஜூன் 19ம் தேதி போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனா். இது குறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலா்கள் முருகன், சாமிதுரை, காவலா்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகியோா் கைது செய்யப்பட்டனர். இவா்கள் 9 போ் மீதும் சிபிஐ போலீஸாா் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.

இது தொடர்பான வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரகு கணேஷ், மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது, அப்போது ரகு கணேஷ் தரப்பில் தனக்கு உடல் நிலை சரியில்லை, சிகிச்சை தேவை படுகிறது. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவேன் என்று கூறினார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழரசி ரகு கணேஷ்யின் உடல் நலம் குறித்த அறிக்கையை சிபிஐ அளிக்கவேண்டும் என்றும் கூறினார். மேலும் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமின் மனு பிப்ரவரி.8க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ.ரகு கணேஷ் ஜாமின் மனு மீதான விசாரணை பிப்.8க்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : SI ,Raghu Ganesh ,Satankulam ,Madurai ,Shathankulam, Thoothukudi district ,Jayaraj ,Bennix ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...