×

ஒன்றாக இருந்த புகைப்படத்தை காண்பித்து காதலி திருமணத்தை நிறுத்திய வாலிபர்: உடந்தையாக இருந்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேருக்கு வலை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜிநகர் 4வது தெருவை சேர்ந்த 18 வயது இளம் பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முகமது யூனூஸ் (19) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். முகமது யூனூஸ் குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் அவரை பிரிந்து சென்றுள்ளார். இந்நிலையில் காதலித்தபோது இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை இளம்பெண்ணிடம் காண்பித்து மிரட்டி முகமது யூனூஸ் பாலியல் உறவுகொண்டுள்ளார். இதை புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு இளம்பெண்ணை மிரட்டி 5 லட்ச ரூபாய் மற்றும் தங்க நகை பறித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு வேரு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதையறிந்த முகமது யூனூஸ் திருமணத்தை நிறுத்த திட்டம்தீட்டியுள்ளார்.

இதையடுத்து தனது நண்பர்களான கொருக்குப்பேட்டை ஆனந்தநாயகிநகர் குறுக்கு தெருவை சேர்ந்த அதிமுக 53வது வட்ட இளைஞரணி செயலாளர் பப்லு என்ற ராமச்சந்திரன் (28) மற்றும் தண்டையார்பேட்டை நேதாஜிநகர் மெயின் தெருவை சேர்ந்த யூசுப் ஆகியோருடன் சேர்ந்து இளம்பெண்ணும் முகமது யூனூஸ் ஒன்றாக இருந்த புகைப்படத்தை மாப்பிள்ளையிடம் காண்பித்து திருமணத்தை நிறுத்தியுள்ளனர். மேலும் இளம்பெண்ணை சர மாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து இளம்பெண் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தண்டை யார்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post ஒன்றாக இருந்த புகைப்படத்தை காண்பித்து காதலி திருமணத்தை நிறுத்திய வாலிபர்: உடந்தையாக இருந்த அதிமுக பிரமுகர் உட்பட 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thandaiyarpet ,4th Street ,Netajinagar ,Mohammad Yunus ,Muhammad Yunus ,
× RELATED வேறொரு பெண்ணுடன் தொடர்பால் தூங்கிய கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி