×

வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் மகாராஷ்டிரா ஆடு ஜோடி ₹48 ஆயிரத்துக்கு விற்பனை

*ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம்

வேலூர் : தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

நேற்று கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 1300க்கும் மேற்பட்ட மாடுகளும், 250க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதன் காரணமாக நேற்று ஒட்டு மொத்தமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை சுமார் ரூ.1 கோடியை தாண்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் தெரிவித்தனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று(நேற்று) 1300க்கும் மேற்பட்ட மாடுகள், 250க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் ரூ.1 கோடி தாண்டி வர்த்தகம் நடைபெற்றது.

கறவை மாடுகளுடன், காளைகளும் அதிகளவில் விற்பனையானது. ஒரேநாளில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது’ என்றனர்.இந்நிலையில் மகாராஷ்டிராவில் வளர்க்கப்படும் பாண்டம் பக் ரகத்தை சேர்ந்த ஒரு ஜோடி ஆட்டை ஆந்திர மாநில வியாபாரி விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார். இந்த ஆடு ஒன்று ரூ.24 ஆயிரம் வீதம் ஜோடி ரூ.48 ஆயிரத்துக்கு விலைபோனது.

The post வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் மகாராஷ்டிரா ஆடு ஜோடி ₹48 ஆயிரத்துக்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Poigai cattle market ,Vellore ,Tamil Nadu ,Vellore Poigai Cattle Market ,Tirupattur ,Ranipet ,Tiruvallur ,Krishnagiri ,Dharmapuri ,Salem ,
× RELATED பொய்கை மாட்டுச்சந்தையில் வரத்து...