×

நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை அரிவாளால் வெட்டிய இறைச்சிக் கடை ஊழியர் கைது

*வேடசந்தூரில் பரபரப்பு

வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் நாடார் தெருவில் வசித்து வருபவர் அரபு அலி (30). இவர் வேடசந்தூரில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு ஜோதிலட்சுமி (எ) ஜாஸ்மினை (25) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் சமீபகாலமாக அரபு அலிக்கு தனது மனைவி ஜாஸ்மினின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் அரபு அலி வீட்டிற்கு வந்தபோது ஜாஸ்மின் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அரபு அலியை பார்த்ததும் அழைப்பை கட் செய்துள்ளார். இது குறித்து ஜாஸ்மினிடம் அரபு அலி விசாரித்துள்ளார். அப்போது கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அரபு அலி கறி வெட்ட பயன்படுத்தும் கத்தியால் ஜாஸ்மின் தலை, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜாஸ்மினை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த நிலையில் அரபு அலியை கைது செய்த வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலித்து திருமணம் செய்த மனைவியை நடத்தை சந்தேகத்தால் கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை அரிவாளால் வெட்டிய இறைச்சிக் கடை ஊழியர் கைது appeared first on Dinakaran.

Tags : Vedasandur ,Arab Ali ,Nadar Street, Vedasandur, Dindigul district ,Jyotilakshmi (A) Jasmin ,
× RELATED கிணற்றில் விழுந்த மயில் மீட்பு