×

கரூரில் வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற ₹1,000 லஞ்சம் வாங்கிய மி.வா போர்மென் கைது

கரூர் : கரூர் அடுத்துள்ள ஆட்சிமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவர், கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார். அந்த வீட்டின் கட்டுமானத்தின் போது வாங்கிய மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்காக கரூர் ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை அணுகியுள்ளார். அப்போது போர்மென் முருகானந்தம் (49), வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றுவதற்காக ₹1,500 லஞ்சமாக கேட்டுள்ளார். இதற்கு கூலித்தொழிலாளி ₹1000 தருவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கூலித்தொழிலாளி, நேற்றுமுன்தினம் கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனை பேரில் ரசாயனம் தடவிய ₹1000த்துடன் கரூர் ராயனூரில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு நேற்று சென்றார். அப்போது அங்கிருந்த முருகானந்தத்திடம் பணத்தை கொடுத்த போது மறைந்திருந்த இன்ஸ்பெக்டர் சாமிநாதன், உதவி ஆய்வாளர் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர், முருகானந்தத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கரூரில் வணிக மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்ற ₹1,000 லஞ்சம் வாங்கிய மி.வா போர்மென் கைது appeared first on Dinakaran.

Tags : Miwa Bormen ,Karur ,Kelakmangalam ,Rayanoor ,
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...