×

பள்ளபட்டி நகராட்சியில் வரி வசூலிக்கும் பணி தீவிரம்

 

அரவக்குறிச்சி, பிப். 7: பள்ளபட்டி நகராட்சியில் வரிவசூல் செய்யும் பணி தீவிரமாக நடக்கிறது. பள்ளபட்டி நகராட்சியில் வரி மற்றும் வரியினங்களை முழுவதுமாக வசூல் செய்ய திட்டமிடப்பட்டு தீவிரமாக வரி வசூல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வார்டு எண்- 6 மற்றும் வார்டு எண் -21 என 2 வார்டுகளில் தீவிரமாக சொத்துவரி, குடிநீர் கட்டணம் வசூல் செய்யப்பட்டதில், சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணங்களில் வரிகளில் நிலுவையில் வைத்துள்ள வார்டு எண்-6 மற்றும் வார்டு எண் -21 ஆகிய வார்டுகளில் 14 குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

மேலும் 25 வார்டுகளிலும் தொடர்ச்சியாக சொத்துவரி மற்றும் குடிநீர் கட்டணங்கள் நிலுவை உள்ள வீடு மற்றும் வணிக பயன்பாடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்யப்படும் எனவும், இதன் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பள்ளபட்டி நகராட்சியிலுள்ள பொதுமக்கள் தங்களது குடியிருப்பு மற்றும் வணிக பயன்பாட்டுகளுக்கு உரிய சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, இதர வரியினங்களை நிலுவையின்றி செலுத்தி குடிநீர் துண்டிப்பு மற்றும் ஜப்தி நடவடிக்கைகளை தவிர்க்குமாறு பள்ளபட்டி ஆணையர் பால்ராஜ் தெரிவித்தார்.

The post பள்ளபட்டி நகராட்சியில் வரி வசூலிக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Pallapatti Municipality ,Aravakurichi ,Dinakaran ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...