×

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வக்கீல் கைது

 

காரிமங்கலம், பிப்.7: காரிமங்கலம் அருகே வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வக்கீலை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் சரவணகுமார்(32), வக்கீல். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி(37) என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சரவணகுமார் குடும்பத்தினர் வீடு கட்டி வரும் நிலையில், அங்கு சென்று சத்தியமூர்த்தி பிரச்னை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சரவணகுமார், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். இதேபோல் சத்தியமூர்த்தியும், சரவணகுமார் மீது புகார் செய்துள்ளார். இந்நிலையில், சரவணகுமார் மற்றும் குடும்பத்தினர், சத்தியமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காரிமங்கலம் போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்தனர். இதனிடையே, சத்தியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், வக்கீல் சரவணகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதை கண்டித்து வக்கீல் சரவணகுமார், நேற்று காலை அனுமந்தபுரம் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அவரை காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். பாலக்கோடு டிஎஸ்பி சிந்து மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர், அவர் மீது மறியல் செய்தது உள்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வக்கீல் கைது appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Saravanakumar ,Anumanthapuram ,Dharmapuri district ,Satyamurthy ,Dinakaran ,
× RELATED காண்ட்ராக்டர் வீட்டில் ₹5 லட்சம், நகை திருட்டு