சென்னை: சென்னை அடுத்த ஆவடி கோயில்பதாகை பழைய அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் சுலோச்சனா மஜி (61). இவரது தம்பி ஜெயபாலன். இவரது வீட்டுக்கான மின் இணைப்பு, வர்த்தகத்துக்கானதாக இருந்தது. இதை வீட்டு மின் இணைப்பாக மாற்றித் தரும்படி விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் அந்த விண்ணப்பத்தை ஏற்று, இணைப்பை மாற்றித் தருவதற்கு ரூ.3 லஞ்சம் வேண்டும் என்று மின்வாரிய பொறியாளரும், வர்த்தக இணைப்பு கவனிக்கும் பொறுப்பாளருமான மரியதாஸ், ஜெயபாலனின் சகோதரி சுலோச்சனாவிடம் கேட்டுள்ளார்.
இதனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுலோச்சனா, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் கொடுத்து அனுப்பிய 3 ஆயிரம் ரூபாயை ஜெயபாலனிடம் சுலோச்சனா கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மரியதாசை கைது செய்தனர்.
The post ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்வாரிய ஊழியர் கைது appeared first on Dinakaran.