×

திருமணமான 6 மாதத்தில் தம்பதி அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை

சென்னை: வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (34), சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (32). இவர்களுக்கு 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனவேதனை அடைந்த தேன்மொழி கடந்த 4ம் தேதி தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள், வாணியம்பாடி தாலுகா காவல் நிலையத்தையும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையையும் முற்றுகையிட்டனர்.

தேன்மொழியின் தற்கொலைக்கு காரணமான கணவர் அருண்குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். சம்பவ இடத்திற்கு வந்த ஆர்டிஓ பிரேமலதா, தேன்மொழியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திஉரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். இந்நிலையில், சென்னை கே.கே.நகரில் அருண்குமார் தங்கியிருந்த அறைக்கு நேற்று முன்தினம் காலை அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது, அவரை காணவில்லையாம்.

உடனே, கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், அருண்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில், அருண்குமார் தான் தங்கியிருந்த அறையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது நேற்று முன்தினம் மாலை கே.கே.நகர் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருமணமான 6 மாதத்தில் தம்பதி அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Arunkumar ,Vaniyampadi Udayendram ,Thenmozhi ,
× RELATED வாலிபருக்கு அரிவாள் வெட்டு