×

குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு

புளியங்குடி, பிப். 7: புளியங்குடி இலந்தைகுளத்தில் நேற்று 45 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் மிதந்தது. அவ்வழியாக சென்றவர்கள் புளியங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பால
கிருஷ்ணன், எஸ்ஐ சஞ்சய்காந்தி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர் புளியங்குடி முப்புடாதி அம்மன் கோவில் தெரு இசக்கிமுத்து மகன் முருகன் என்பதும், கட்டிட தொழிலாளியான இவர் கடந்த ஞாயிறன்று மதியம் குளத்திற்கு குளிக்க சென்றதில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது. இறந்த முருகனுக்கு முப்புடாதி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

The post குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Puliangudi ,Puliangudi Ilanthaikulam ,Inspector ,Pala Krishnan ,SI Sanjaykanti ,Dinakaran ,
× RELATED சிவகிரியில் பைக்கில் கடத்திய புகையிலை பொருட்கள் பறிமுதல்