×

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும்: புரட்சி பாரதம் கட்சி தலைவரிடம் கோரிக்கை

திருவள்ளூர்: வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும் என்று புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவிடம் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வழக்கறிஞர் சட்ட மசோதா கடந்த 2021ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதனை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்தவகையில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பட்டாபிராம் இளங்கோவன் தலைமையில், புரட்சி பாரதம் கட்சியின் வழக்கறிஞர் அணி பொதுச் செயலாளர் ஸ்ரீதர், பூந்தமல்லி நீதிமன்ற குற்றவியல் சங்கத் தலைவர் தாமஸ் பர்ணபாஸ், ரகுநாத், சிவராமன், ரஞ்சித்,
உள்பட 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று திரண்டனர்.

பின்னர் பட்டாபிராம், அண்ணா நகரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதனையடுத்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவை சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து சட்டசபையில் குரல் கொடுக்க வலியுறுத்தினர். அப்போது வழக்கறிஞர்கள் பணியை செய்யும் போது, தாக்குதல், மிரட்டல் போன்ற பல சம்பவங்கள் நடைபெறுகிறது. ரவுடிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வருகிறது. இதனால் எங்கள் கடமைகளை சரியான முறையில் செயல்படுத்த முடியாமல் போகிறது. எனவே தமிழ்நாட்டில் விரைவில் வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை அமல்படுத்த நீங்கள் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

The post வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்ற குரல் கொடுக்க வேண்டும்: புரட்சி பாரதம் கட்சி தலைவரிடம் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pratchii Bharatham Party ,Tiruvallur ,Pradachi Bharatham Party ,Poowai M. Jaganmurthy ,MLA ,Dinakaran ,
× RELATED கடந்த 10 ஆண்டுகளாக ஏன் முயற்சி...