×

இமாச்சலில் நிலச்சரிவு: 2 பேர் பலி

சிம்லா: இமாச்சலில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் பலியானார்கள். இமாச்சலப்பிரதேச தலைநகர் சிம்லாவில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ஜங்கா சாலை பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் இருந்த 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

இதில் வீட்டில் இருந்த 5 தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். ஆனால் 2 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினார்கள். தகவல் அறிந்த பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். தீயணைப்பு துறையினர் உதவியோடு கட்டிட இடிபாடுகளில் சிக்கிய உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. உயிரிழந்த இருவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.

The post இமாச்சலில் நிலச்சரிவு: 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Shimla ,Himachal ,Himachal Pradesh ,Janga road ,Dinakaran ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...