திருவள்ளூர்: திருவள்ளூர், பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.
அப்போது பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் உமாசங்கர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்கள் மேரி, குமரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி பயிற்றுனர் மோகன் பாபு அனைவரையும் வரவேற்றார். விழாவில் திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முனைவர் சேதுராஜன் கலந்து கொண்டு விளையாட்டின் முக்கியத்துவம் பற்றி விளக்கிக் கூறினார். விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இந்த விளையாட்டு விழாவின் வெற்றியாளர்களாக மருதம் அணியும், தொடர் வெற்றியாளர்களாக முல்லை அணியும் அறிவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து 2 அணியின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், கேடயத்தை பெற்றுக்கொண்டனர்.
The post பாரதிதாசன் பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா appeared first on Dinakaran.