×

ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் 243ம் அரசாணையை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் சமூகத்திற்கு நன்மை செய்வதாகக் கூறிக் கொண்டு தமிழக அரசு கொண்டு வந்துள்ள அரசாணை எண் 243 இடைநிலை ஆசிரியர்களுக்கு, குறிப்பாக ஆசிரியைகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆண்டுகளாக இருந்த பதவி உயர்வு நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியராக 7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கும், பத்தாண்டுகள் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும், அதன்பின் 6 ஆண்டுகள் பட்டதாரி ஆசிரியராகவும் பணியாற்றியவருக்கும் இடையே போட்டி ஏற்பட்டால் 16 ஆண்டுகள் பணியாற்றியவரை ஒதுக்கி விட்டு, 7 ஆண்டுகள் பணியாற்றியவருக்கு தான் பதவி உயர்வு வழங்கப்படும்.

தமிழக அரசின் இந்த புதிய ஆணை பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்த அரசாணையால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர். இதை தமிழக அரசு உணர்ந்து 243ம் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

 

The post ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் 243ம் அரசாணையை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,government ,Chennai ,Palamaka ,Government No. ,Tamil Nadu government ,Tamil Nadu ,Ramadas' ,243rd government ,
× RELATED நெல் குவிண்டாலுக்கு ரூ.700 ஊக்கத்தொகை தரவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்