×

வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி: பயணி புகார்

மத்திய பிரதேசம்: ராணி கம்லாபதி – ஜபல்பூர் செல்லும் வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை கண்டு பயணி அதிர்ச்சியடைந்தார். சுபேந்து கேஷரி என்ற பயணி வந்தே பாரத் ரயிலில் பயணித்தபோது அசைவ உணவு வாங்கியுள்ளார். உணவில் கரப்பான் பூச்சி கிடந்ததை அடுத்து புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பயணி புகார் தெரிவித்துள்ளார்.

 

The post வந்தே பாரத் ரயிலில் வழங்கிய உணவில் கரப்பான் பூச்சி: பயணி புகார் appeared first on Dinakaran.

Tags : Madhya Pradesh ,Rani Kamlapati ,Jabalpur ,Bharat ,IRCTC ,Subendu Keshari ,
× RELATED இந்தூர் காங்.வேட்பாளர் பாஜகவில் இணைந்தார்..!!