×

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விவகாரம்; என்னை கொல்லுங்கள்… ஆனால்!: நடிகை பூனம் பாண்டே உருக்கம்

மும்பை:கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விவகாரத்தில் சிக்கிய நடிகை பூனம் பாண்டே, ‘நான் கொலை செய்யப்படலாம்’ என்று உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். பாலிவுட் நடிகை பூனம் பாண்டே கடந்த சில நாட்களுக்கு முன் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறந்துவிட்டதாக, அவரது மேலாளர் அறிவித்தார். ஆனால் அடுத்த நாளே ‘நான் சாகவில்லை. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக இப்படியொரு பதிவை வெளியிட்டோம்’ என்று பூனம் பாண்டே தெரிவித்தார். இறந்துவிட்டதாக போலி செய்தி பரப்பியதால், பூனம் பாண்டேவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் பூனம் பாண்டே வெளியிட்ட மற்றொரு பதிவில், ‘நான் கொலை செய்யப்படலாம், சிலுவையில் அறையப்படலாம், மற்றவர்களால் வெறுக்கப்படலாம். ஆனால், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மற்றும் நீங்கள் விரும்பும் ஒருவரைக் காப்பாற்றுங்கள். எல்லோரும் என்னை மன்னிக்கவும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவ்வாறு பதிவை வெளியிட்டிருந்தேன்.

எனது போலியான மரணச் செய்தியால் அனைவரும் கவலையடைந்தனர். உண்மையில் எனது அறிவிப்பு மற்றவர்களை கவலையடைய செய்யும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் எனது பதிவுக்கு பின்னர், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து பலரும் விவாதித்தனர். அதனை பற்றிய விழிப்புணர்வும் நடந்தது. உயிரை மெல்ல ெமல்ல கொல்லும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயானது பல பெண்களின் உயிரைப் பறித்துள்ளது. மற்ற புற்றுநோய்களைப் போலவே, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும் தடுக்கக்கூடியது. எனவே பாதிக்கப்பட்டவர்கள் ஹெச்பிவி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

The post கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விவகாரம்; என்னை கொல்லுங்கள்… ஆனால்!: நடிகை பூனம் பாண்டே உருக்கம் appeared first on Dinakaran.

Tags : Poonam Pandey Urukham ,Mumbai ,Poonam Pandey ,Bollywood ,Poonam Pandey Urukum ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!