×

ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

மேட்ரிட் : ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டார். இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அவர், “ஸ்பெயின் நாட்டில் வெற்றிகரமாக தொழில் முதலீட்டு ஈர்ப்பு பயணம் மேற்கொண்டதில் மகிழ்ச்சி. கெஸ்டாம்ப், டால்கோ, எடிபன் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டேன்.நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree நிறுவனத்துடன் கலந்துரையாடினேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post ஸ்பெயினில் எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Edipan ,Spain ,Chief Minister ,M.K.Stal ,Madrid ,M. K. Stalin ,Dinakaran ,
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...